சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான கடிதம் தொடர்பாக இலங்கை காவல்துறை விளக்கமொன்றை வெளியிட்டுள்ளது.
தவறான தகவல்களை பரப்பியவர்களிடம் எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க குற்ற விசாரணைப் பிரிவின் மூலம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
“Conviction” என்ற தலைப்புடன், இடைக்கால காவல்துறை மா அதிபர் திரு. பிரியந்த வீரசூரியவின் பெயரும் கையொப்பமும் போலியாக இணைக்கப்பட்டுள்ள ஆங்கில மொழியில் தயாரிக்கப்பட்ட கடிதமொன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இக்கடிதத்தில் எந்தவொரு சட்டபூர்வமான அடிப்படையும் இல்லாத வார்த்தைகள் மற்றும் இலங்கை தேசிய சின்னம், உச்சநீதிமன்ற முத்திரை மற்றும் காவல்துறை சின்னத்தை போல தயாரிக்கப்பட்ட பொய்யான உருவாக்கங்கள் காணப்படுகின்றன.
“Cyber Crime Headquarters Colombo, Sri Lanka” எனக் குறிப்பிடப்பட்ட நிறுவனமொன்று இலங்கையில் இல்லை என்றும், அதில் குறிப்பிடப்பட்ட பதவிகள் மற்றும் தகவல்கள் காவல்துறையால் ஒருபோதும் வெளியிடப்படவில்லை என்றும் காவல்துறை தெரிவிக்கின்றது.
இக்கடிதம் திட்டமிட்டு காவல்துறையின் நற்பெயரைக் கெடுக்கவும், மக்களை தவறாக வழிநடத்தவும் உருவாக்கப்பட்டதெனவும் காவல்துறை அறிவித்துள்ளது.